திங்கள், 3 செப்டம்பர், 2018

சதுரங்கம்(chess) கற்கலாம் வாங்க-01


 அன்புடையீர்,
             வணக்கம். இந்த வலைப்பக்கத்தில் செஸ் விளையாட்டு பற்றிய பாடங்கள்  இன்று முதல் பதிவிடப்படுகின்றன.அனைவரும் கற்று தேர்ந்து விளையாட வாங்க!....

                             CHESS என்னும் சதுரங்க விளையாட்டு....

                      பாடம்.-01 செஸ் போட்டியின் வரலாறு.

                                              வேட்டையாடி காட்டுவாசியாக சுற்றித்திரிந்த மனிதன்  சிந்திக்கத்தொடங்கினான்.கல்வியறிவு பெற்றான்.கணிதத்தை கற்று அறிவியல்முன்னேற்றம் அடைந்தான்.பண்புள்ள மனிதனாக வாழ்வதற்கான பல இலக்கியங்களை எழுதி தம் வருங்காலத்தோன்றல்களுக்கு புத்தகங்களாக பதிப்பித்து வைத்தான்.புத்தகங்களை வாசித்து வாசித்து அறம்,பொருள்,இன்பத்தை அடைந்தான்.எத்தனையோ கண்டுபிடிப்புகளால் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி,சமூகமாக ஒன்றுபட்டு பல வசதிகளை பெற்று வாழ்ந்து வருகிறான்.ஆனால், போரிடுவதை மட்டும் மனிதசமூகத்தினால் இன்றுவரை தவிர்க்க முடியவில்லை.
           கற்கால யுத்தம்,ராம-ராவண யுத்தம்,மகாபாரதப்போர், எனத்தொடங்கி இந்தியா-பாகிஸ்தான் போர்,இந்தியா-சீனா  யுத்தம்,உள்நாட்டுப்போர்,விடுதலைக்கான போர்,என ஆதிகாலம் முதல் இன்று வரை எவரும் போரிடுதலை கைவிடவில்லை.
 மன்னராட்சி,மக்களாட்சி,சர்வாதிகாரம்,கம்யூனிசம்,சோஷலிசம், என எவ்வகையான ஆட்சி நடைபெற்றாலும் அதற்கு அடித்தளமே போரிடும் படைபலம் ஆகும்.
படைபலத்தை வைத்துதான் ஒரு நாட்டின் வலிமை கணிக்கப்படுகிறது.. அவ்வாறான படைகளை (1)தேர்ப்படை , (2)யானைப்படை (3)குதிரைப்படை (4) காலாட்படை என்னும் சிப்பாய்கள் படை ஆகிய நான்கு பிரிவுகளை வைத்து சதுர்+அங்கங்களை வைத்துதான் அந்தக்காலங்களில் மன்னர்கள் தமது நாட்டின் வலிமையை உலகிற்கு அறிவித்து வந்தார்கள்.ஒவ்வொரு படைக்கும் இப்படித்தான் வழிவகுத்துச்சென்று போரிட வேண்டும் என்ற விதிகளையும் வகுத்து செயல்படுத்தினார்கள். ஓய்வு காலங்களில் போரிடும் யுத்தியை மறந்துவிடக்கூடாது என்ற சிந்தனையில் அந்த படைகளின் பெயர்களாலேயே நான்கு முக்கிய பிரிவுகளை வைத்து சதுரங்கம் என்ற விளையாட்டினை   ஆடியும் வந்தார்கள்.
சதுரங்க விளையாட்டு (CHESS) என்பது  யுத்தத்தின் மாதிரிதாங்க. அதாவது MODEL OF A WAR என்பர். இந்த விளையாட்டில் செஸ்போர்டு யுத்தகளமாகவும்,விளையாட வைக்கப்படும் காய்களும்,பான்களும் போரிடும் படைகளாகும்.அதாவது கருப்பு,வெள்ளை என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு இருபக்கமும் விளையாடுபவர் இருவர் அமர்ந்து விளையாடுவர்.
 போர்க்களத்தில் பங்கேற்கும் படைப்பிரிவுகளைப்போன்றே இந்த விளையாட்டிலும் காய்கள் வைக்கப்படுகின்றன.ஒவ்வொரு காய்களுக்கும் போர்ப்படையைப்போன்றே நகரும் வழிகள் வெவ்வேறாக உருவாக்கப்பட்டுள்ளன. ராஜா-1,ராணி-1, பிஷப்-2,நைட்-2,ரூக்-2 ,சிப்பாய் -8 என வெள்ளைக்கு 16 காய்களும்,கருப்பிற்கு 16 காய்களும் ஆகமொத்தம் 32காய்களைக் கொண்டு செஸ் விளையாட்டு விளையாடப்படுகிறது.
       தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக