ஞாயிறு, 1 மார்ச், 2015
திருவள்ளுவர் சிலை-கன்னியாகுமரி.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
அய்யன் திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது.
சிலை குறிப்புகள்
மொத்த சிலையின் உயரம் - 133 அடி
சிலையின் உயரம் - 95 அடி
பீடத்தின் உயரம் - 38 அடி
சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
சிலையின் மொத்த எடை - 7,000 டன்
சிலையின் எடை - 2,500 டன்பீடத்தின் எடை - 1,500 டன்
பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
சிலை அளவுகள்
முக உயரம் - 10 அடி
கொண்டை - 3 அடி
முகத்தின் நீளம் - 3
அடிதோள்பட்டை அகலம் -30 அடி
கைத்தலம் - 10 அடி
உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்..
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
- திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
- திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
- திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
- திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
- திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
- திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள் உலக மொழிகளில்!........
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
உலக மொழிகளில் திருக்குறள்
ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730ல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் தந்தை பேஸ்ச்சி (Father Beschi) ஆவார்.திருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே.மொழிபெயர்ப்புகள்
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது . இதுவரை 80மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.இந்திய மொழிகள்
குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 13 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுஆசிய மொழிகள்
அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய மொழிகள்
செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு_மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.திருக்குறள் நூலாராய்வு
திருக்குறள் நூலாராய்வானது இரண்டு அடிப்படைகளில் செய்யப்படவேண்டியுள்ளன. அவையாவன:- நூலின் அமைப்பு முறை
- திருக்குறளில் கூறப்பட்டிருப்பவைகள்
திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
திருக்குறள் நூற் பிரிவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
அறத்துப்பால் (1-38)
|
பொருட்பால் (39-108)
|
காமத்துப்பால் (109-133)
|
திருக்குறள் மன்றம் தாளவாடி-2015
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.2015 மார்ச் 01 ஞாயிறு (இன்று) முதல் உலகப்பொதுமறையாம் திருக்குறள் படிப்போம்.பரப்புரை செய்வோம் வாங்க....
என அன்பன்
பரமேஸ்வரன்.C,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்
தாளவாடி கிளை.
வணக்கம்.
திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.2015 மார்ச் 01 ஞாயிறு (இன்று) முதல் உலகப்பொதுமறையாம் திருக்குறள் படிப்போம்.பரப்புரை செய்வோம் வாங்க....
என அன்பன்
பரமேஸ்வரன்.C,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்
தாளவாடி கிளை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)