வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சதுரங்க விளையாட்டு மூளைப்பயிற்சிக்கான விளையாட்டு.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
            சதுரங்கம் கற்கலாம் வாங்க!,வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.மூளைப் பயிற்சிக்கான விளையாட்டுகளுள் முதன்மையான விளையாட்டு சதுரங்கம் விளையாட்டு.அறிவை கூர்மை படுத்தும் விளையாட்டு. மிக எளிமையான விளையாட்டு.உலகலளவில் அதிகமான மக்களால் விளையாடப்படுகிறது. சதுரங்கம் விளையாட்டு இந்தியாவில் தோன்றி அரேபியர்களால் உலகளவில் பரப்பப்பட்ட விளையாட்டு.பழங்காலத்தில் இந்திய அரசர்களிடம் - தேர்ப்படை,யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை என படைப்பிரிவுகள் இருந்தன.அதேபோல் சதுரங்கம் விளையாட்டிலும் நான்குவகை படை அணிகள் உள்ளன.
 சதுரங்க விளையாட்டில் இயற்கணிதக் குறியீட்டு முறையை (Algebraic Notation) அரேபியர்களே அறிமுகப்படுத்தினர்.கி.பி.ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆடப்பட்ட சதுரங்கம் விளையாட்டு, கி.பி.பதினைந்தாம்  நூற்றாண்டில் உலகம் முழுவதும் பரவியது.
கி.பி.1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உலக சதுரங்க கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.யுனெஸ்கோ பன்னாட்டு அமைப்பில் 1980ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தது. இந்நாள்வரை 189 தேசிய சங்கங்கள் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர்.
2000ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சதுரங்கம் விளையாட்டுப்போட்டியில் நம்ம தமிழர் திரு.விஸ்வநாதன் ஆனந்த்  உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.திரு.விஸ்வநாதன் ஆனந்த் அவர்களே சதுரங்கப்போட்டியில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டினர் என்ற பெருமையை பெற்றார்.
உலக சதுரங்க கூட்டமைப்பு World Chee Federation பிரெஞ்ச் மொழியில் Federation Internationale Des Echess பெடரேசன் இன்டர்நேசனலே டெஸ் எக்கேக்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பின் தலைமையகம்பிரான்ஸ் நாட்டில் பாரீஸ்நகரில் அமைந்துள்ளது.
(1) உலக சதுரங்க கூட்டமைப்பின்
   இணையதள முகவரி www.fide.com
(2)  இந்திய சதுரங்க கூட்டமைப்பின் 
     இணையதள முகவரி;   www.aicf.in
(3)  தமிழ்நாடு சதுரங்கக் கழகம் தொடர்பான
         செய்திகளை அறிய www.tanchess.com






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக